மயிலாடுதுறை, டிச.6 - தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடகரை அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திமுக சார்பில் நடைபெற்றது.
செம்பனார்கோயில் அருகே இளையாளூர் ஊராட்சி அரங்கக்குடி வடகரை அரசு உயர்நிலை பள்ளியில் 2023-24ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 2 மாணவி களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகையை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்.
இதனையடுத்து 100 சதவீதம் தேர்ச்சி பெற உதவிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.